ரூ. 7.32 கோடி இடைக்கால நிவாரணம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

                                             


  தர்மபுரி கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 7.32 கோடி இடைக்கால நிவாரணம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த நவம்பர் 7-ந்தேதி, தர்மபுரி மாவட்டத்தில் நாயக்கன்கொட்டாய் பகுதியில்  ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் வீடுகள் எரிக்கப்பட்டன.
இரு வேறு சமூகத்தை சேர்ந்த இருவர் காதல் திருமணம் செய்துக்கொண்டதால் இந்த கலவரம் நடந்தது.
அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்ட 2326 குடும்பத்தினருக்கு  2 வார காலத்தில், இடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்கை வரும் பிப்ரவரி 4ந்தேதி வரை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்