தருமபுரி மாவட்டத்தில் வைக்கோல் கிடைக்காமல் கால்நடைகள் பாதிப்பு

வைக்கோல்

     தருமபுரி மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியை அடுத்து வெளிமாவட்டங்களில் இருந்து கால்நடைகளுக்கான வைக்கோல் கொண்டுவரப்பட்டு விற்கப்படுகிறது.
    தருமபுரி சுற்றுவட்டாரப் பகுதியில், கடந்த 5 வருடங்களாக பருவமழை பொய்த்து போனதால், விவசாய தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல் கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் புதுவை, விழுப்புரம், தஞ்சை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, லாரிகள் மூலம் வைக்கோல் கொண்டுவந்து தர்மபுரி மாவட்டத்தில் விற்கப்படுகிறது.
  அதிக விலை கொடுத்து வைக்கோலை வாங்குவதால், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.