15 பேர் தருமபுரியில் மாணவர்கள் பட்டினிப் போராட்டம்

   இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளிக்க வலியுறுத்தி தருமபுரி கல்லூரி மாணவர்கள் நடத்தும் பட்டினிப் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது.
   கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து, 30 மாணவர்கள் விடுதியின் வாயிலில் அமர்ந்து பட்டினிப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவர்களில் இரு மாணவர்களுக்கு உடல்நிலை மோசமானதையடுத்து, அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
   மேலும் நேற்றிரவு 8 பேர், இன்று அதிகாலை 5 பேர் என இதுவரை 15 பேரின் உடல்நிலை மோசமானதால் அவர்களனைவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
   ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை மாநாட்டில், இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை அதிபருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளையும் மாணவர்கள் முன்வைத்துள்ளனர்.

                                                       --இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்